இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
728
சங்க இலக்கியத்
“மழைவிளை யாடும் கழைவளர் அடுக்கத்து”
-பெரும்பா. 257
“கழைவளர் நவிரத்து”
-மலைப. 579
கழையின் கொம்பு மிக ஓங்கி வளரும், என்றும் அதன் கவடுகளிலே கடுவன் உகளும் என்றும் கூறுவர் புலவர்.
“நெடுங்கழைக் கொம்பர் கடுவன் உகளினும்” -மலைப. 237
எனினும் ‘கழை’ என்பது ‘பெருமூங்கிலைக்’ குறித்தது என்றே யாம் உரை கண்டாம்.
உந்தூழ் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | குளுமேசி |
தாவரக் குடும்பம் | : | கிராமினே |
தாவரப் பேரினப் பெயர் | : | பாம்பூசா (Bambusa) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | அருண்டினேசியா (arundinacea, willd.) |
சங்க இலக்கியப் பெயர் | : | உந்தூழ் |
உலக வழக்குப் பெயர் | : | பெருமூங்கில், மூங்கில் |
தாவர இயல்பு | : | நெடுநாள் வாழும், ஒரு தரம் பூக்கும். 80 முதல் 100 அடி வரை மிக உயரமான ‘கல்ம்’ என்னும் தண்டு உடையது. 4 முதல் 7 அங். அகலமுள்ளது தண்டின் கணுவில் தோன்றும் கிளைகள் முட்களுடன் இருக்கும். உட்கூடு உள்ளது. மிக வலிமையானது |
குருத்து | : | அடிமட்டத் தண்டிலிருந்து ஓங்கி வளரும். கழிகளின் குருத்து கூரியது. கரும் பழுப்பு நிறமான மெல்லிய |