பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

728

சங்க இலக்கியத்

“மழைவிளை யாடும் கழைவளர் அடுக்கத்து” -பெரும்பா. 257
“கழைவளர் நவிரத்து” -மலைப. 579

கழையின் கொம்பு மிக ஓங்கி வளரும், என்றும் அதன் கவடுகளிலே கடுவன் உகளும் என்றும் கூறுவர் புலவர்.

“நெடுங்கழைக் கொம்பர் கடுவன் உகளினும்” -மலைப. 237

எனினும் ‘கழை’ என்பது ‘பெருமூங்கிலைக்’ குறித்தது என்றே யாம் உரை கண்டாம்.

உந்தூழ் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி
தாவரக் குடும்பம் : கிராமினே
தாவரப் பேரினப் பெயர் : பாம்பூசா (Bambusa)
தாவரச் சிற்றினப் பெயர் : அருண்டினேசியா (arundinacea, willd.)
சங்க இலக்கியப் பெயர் : உந்தூழ்
உலக வழக்குப் பெயர் : பெருமூங்கில், மூங்கில்
தாவர இயல்பு : நெடுநாள் வாழும், ஒரு தரம் பூக்கும். 80 முதல் 100 அடி வரை மிக உயரமான ‘கல்ம்’ என்னும் தண்டு உடையது. 4 முதல் 7 அங். அகலமுள்ளது தண்டின் கணுவில் தோன்றும் கிளைகள் முட்களுடன் இருக்கும். உட்கூடு உள்ளது. மிக வலிமையானது
குருத்து : அடிமட்டத் தண்டிலிருந்து ஓங்கி வளரும். கழிகளின் குருத்து கூரியது. கரும் பழுப்பு நிறமான மெல்லிய