பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

737

தாவரச் சிற்றினப் பெயர் : டாக்டிலான் (dactylon)
சங்க இலக்கியப் பெயர் : அறுகை
தாவர இயல்பு : தோன்றிய நாள் தொட்டு உயிருடன் வாழும் ஒரே உயிர் இந்த அறுகம்புல்.
தண்டு : தரைக்கு அடியில் அறுகையின் வெண்ணிறத் தரை மட்டத் தண்டு மிகவும் நீண்டு வளர்ந்து கொண்டிருக்கும். தரைக்கு மேல் உள்ள ‘கல்ம்’ என்னும் தண்டு 2-18 அங். நீளம் வரை இருக்கும்.
இலை : புல்லின் இலையைத் தொல்காப்பியம் ‘ஓலை’ என்றும், மலரிதழைத் ‘தோடு’ என்றும் கூறும். (தொல். மரபியல் 9 : 88) அடியில் உள்ள இலை தட்டையானது. மேலே உள்ள இலைகள் 4-4.7 அங். நீளமும், 0.03-0.11 அகலமும் இருக்கும்.
மஞ்சரி : ‘ஸ்பைக்லெட்’ எனப்படும் பூந்துணர்.
மலர் : தனி மலர்கள், மலர்த்தண்டில் நேராக இணைந்துள்ளன. மாறி, மாறி இரு சுற்றடுக்கில் இருக்கும். மலர்கள் உண்டாகும் 2 ‘குளும்’ வெற்றுமிகள் ‘லெம்னா’ அகன்றவை; மிக மெல்லியவை; படகு வடிவானவை; 3 நரம்புகள் காணப்படும். ‘பாலியா’ இரு ‘கீல்’களை உடையது. இதில் இருபாலான மலர்கள் உள்ளன. இவற்றை மிகச் சிறிய இரு ‘லாடிகுயூல்’ என்ற மலர் உமிகள் மூடியிருக்கும்.
மகரந்த வட்டம் : 3 தாதிழைகள்
சூலக வட்டம் : அடியில் ஒரு செல் சூலறைச் சூலகம். சூல்தண்டு-2 பிரிந்திருக்கும்.
கனி : லெம்னா, பாலியா ஆகிய வெற்றுமிகளுக்குள் சற்று நீண்டு, தடித்த, மிகச் சிறிய கனி-விதை உண்டாகும்.
 

73-47