இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
737
தாவரச் சிற்றினப் பெயர் | : | டாக்டிலான் (dactylon) |
சங்க இலக்கியப் பெயர் | : | அறுகை |
தாவர இயல்பு | : | தோன்றிய நாள் தொட்டு உயிருடன் வாழும் ஒரே உயிர் இந்த அறுகம்புல். |
தண்டு | : | தரைக்கு அடியில் அறுகையின் வெண்ணிறத் தரை மட்டத் தண்டு மிகவும் நீண்டு வளர்ந்து கொண்டிருக்கும். தரைக்கு மேல் உள்ள ‘கல்ம்’ என்னும் தண்டு 2-18 அங். நீளம் வரை இருக்கும். |
இலை | : | புல்லின் இலையைத் தொல்காப்பியம் ‘ஓலை’ என்றும், மலரிதழைத் ‘தோடு’ என்றும் கூறும். (தொல். மரபியல் 9 : 88) அடியில் உள்ள இலை தட்டையானது. மேலே உள்ள இலைகள் 4-4.7 அங். நீளமும், 0.03-0.11 அகலமும் இருக்கும். |
மஞ்சரி | : | ‘ஸ்பைக்லெட்’ எனப்படும் பூந்துணர். |
மலர் | : | தனி மலர்கள், மலர்த்தண்டில் நேராக இணைந்துள்ளன. மாறி, மாறி இரு சுற்றடுக்கில் இருக்கும். மலர்கள் உண்டாகும் 2 ‘குளும்’ வெற்றுமிகள் ‘லெம்னா’ அகன்றவை; மிக மெல்லியவை; படகு வடிவானவை; 3 நரம்புகள் காணப்படும். ‘பாலியா’ இரு ‘கீல்’களை உடையது. இதில் இருபாலான மலர்கள் உள்ளன. இவற்றை மிகச் சிறிய இரு ‘லாடிகுயூல்’ என்ற மலர் உமிகள் மூடியிருக்கும். |
மகரந்த வட்டம் | : | 3 தாதிழைகள் |
சூலக வட்டம் | : | அடியில் ஒரு செல் சூலறைச் சூலகம். சூல்தண்டு-2 பிரிந்திருக்கும். |
கனி | : | லெம்னா, பாலியா ஆகிய வெற்றுமிகளுக்குள் சற்று நீண்டு, தடித்த, மிகச் சிறிய கனி-விதை உண்டாகும். |
73-47