பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

நாகம்–புன்னாகம்–சுரபுன்னை
ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

சங்க இலக்கியப் பாக்கள் பலவற்றில் ‘நாகம்’ என்பது குறிப்பிடப்படுகிறது. நச்சினார்க்கினியர் குறிஞ்சிப்பாட்டடியில் வரும் ‘நாகம்’ என்பதற்கு ‘நாகப்பூ’ என்றும், மலைபடு கடாத்தில் வரும் ‘நாகம்’ என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்றும், பிறவிடங்களில் வரும் ‘நாகம்’ என்பதற்குச் ‘சுரபுன்னை’ என்றும் உரை கண்டுள்ளார். சங்கப் பாடல்களில் வரும் ‘வழை’ என்பதற்கும் இவர் ‘சுரபுன்னை’ என்று உரை கூறுவர். ஆகவே, நாகம், வழை என்பவை சுரபுன்னை எனக் கருதப்படுதலின், ‘நாகம்’ என்பதற்கான தாவர விளக்கவுரையினை ‘வழை’ என்ற தலைப்பிற் கண்டு கொள்ளலாம்.

சங்க இலக்கியப் பெயர் : நாகம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : வழை, புன்னாகம்
பிற்கால இலக்கியப் பெயர் : சுரபுன்னை
தாவரப் பெயர் : ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

நாகம்–புன்னாகம்–சுரபுன்னை இலக்கியம்

“நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி”-குறிஞ். 94

என்றார் குறிஞ்சிக் கபிலர்.

“நறுவீ உறைக்கும் நாக நெடுவழி”-சிறுபா. 88
“நளிசினை நறும்போது கஞலிய நாகு முதிர்நாகத்த”
(சிறுபா.108)

“நறுவி நாகமும் அகிலும் ஆரமும்”-சிறுபா. 116

என்றார் நத்தத்தனார்.

 

73-6