31
வது செய்ததன் கண் முடிய நில்லாது தப்பியொழுகுதல், கரணத்தொடு முடிந்த காலையின் அவையிரண்டும் நிகழுமாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று. [1]
இனி, மகளிர்தம் கற்புக் காலப் பண்புகளையும் பணிகளையும் விரிவாகக் காண்போம்.
கற்பு:
‘கற்பு’ என்ற சொல்லிற்குக் கணவன் கற்பித்த வழியில் ‘மனைவி நிற்றல்’ என்றும், ‘கற்போன்ற திண்மை நெஞ்சு உடையளாயிருத்தல்’ என்றும் பொருள் விரிப்பர். “உயிரினும் நாணம் சிறந்தது; அந்நாணத்திலும் கற்புச் சிறந்தது” என்றும் தொல்காப்பியனார் குறிப்பிடுவர்.[2]
“இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?” என்று வினவுகின்றார் திருவள்ளுவர்:
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
எனவேதான், இளங்கோவடிகள் கண்ணகியின் பெருமையினைக் கவுந்தியடிகள் வாயிலாகச் சிறப்பித்துப் பேசும் பொழுது,
இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக்
கற்புக்கடம் பூண்ட இத்தெய்வ மல்லது