பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக!

என்பதும் பரணர் பாட்டு.

"வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞசைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்”

என்பது சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் பாட்டு.

இங்ஙனம் மயிலுக்குப் படாம் அளித்துத் தன் மாளிகைக்குச் சென்று, அன்று தான் செய்த அரும்பெருஞ் செயல் குறித்து அகங் களிகொண்டனன். ஈத்து உவக்கும் இன்பம் அவாவுபவன் ஆதலின், இவன் செயல் குறித்து இவனே இத்துணை மகிழ்ந்தனன்.

பேகனது ஈகையின் இயல்பு

பேகன் பண்டம் மாற்றுப்போலத் தன் பொருள்களை இரவர்களுக்கு ஈந்து அதன் மூலம் புண்ணியத்தைப் பெறவேண்டும் என்று எண்ணுபவன் அல்லன். எத்துணையாயினும் ஈதல் நன்று என எண்ணும் மனப்பான்மையன். இவன் தான் செய்யும் ஈகை மறுமைக்குப் பயன் தரவல்லது என்று நினைத்துச் செய்யும் ஈகையன் அல்லன். யாசகர்களின் வறுமை நோக்கி, அவ்வறுமை தீரக் கொடுத்தல் முறையென்பதை உள்ளங்கொண்டவன். “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்னும் பண்பு வாய்ந்தவன். இதனை அழகுப்படப் பரணர்