பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாக்ரங்கள்,துர்துபற்றியவை 303 கள். மயங்கினாள் என்று முடிந்ததாகவே சொல்லி விட்டால், அப்படியா? முடிந்து போய் விட்டாளா? இனிப் போய் நாம் என்ன செய்து என்று சொல்லி ஒரு முழுக்கு போட்டு விட்டு நிற்பன். அப்படியின்றி அரைகுறையத் தலைகுறைய ஆனைக்கு உதவ ஓடி வந்தாற் போலே கடுக ஓடிவரும்படியாகச் சிறிது பசையிருப்பதாகச் சொல்லுங்கள்’ என்கின்றாளாயிற்று. - 'பூவை என்ற ஒரு பறவையிடம் பேசுகின்றாள் பராங்குச நாயகி. ஏற்கெனவே உன்னை வேண்டிக் கொண்டிருந்தும், எனக்காக நீ தூது செல்லாது அசட்டை யாய் இருந்து விட்டாய்-நோயெனது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய்" என்கின்றாள். சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்கான் இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை கண்ட யே (8) (மணிமாமை - அழகான நிறம், இன்னடிசில் - மதுர ഥr് ജ?) ; ു - என்று தற்கால நிலையைக் கூறுகின்றாள். சாயல் என்பது சமுதாய சோபை; இது வடமொழியில் இலாவண்யம்’ எனப்படும். மணிமாமை என்பது அழகு. இவ்விரண்டும் நீங்கப் பெற்றேன்" என்கின்றாள். இங்கனம் இவள் சொல்லக் கேட்ட பூவை இதோ விரைந்து சென்று எம்பெருமானுக்கு அறிவிக்கின்றேன் என்று புறப்ப-க் தொடங்கும்போது "இனி உனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே’ என்கின்றாள். நானோ முடியா நின்றேன்: இனி உனக்கு இரட்சகராவாரைத் தேடிக் கொள்’ என்கின்றாள். - இவ்விடத்தில் ஓர் ஐதிகம் : பெரிய திருமலை நம்பி என்னும் ஆசிரியர் வெண்ணெய்க் காடும் பிள்ளை' என்கின்ற கிருட்டிணத் திருமேனியை வழிபாடு செய்து வந்தார். அவர்