பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 ® ம.பொ. சிவஞானம் விவாதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். ஆகவே, இன்றைக்கு இந்தச் சபையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு திரு.மு.கருணாநிதி: பேரவைத் தலைவர் அவர்களே. தமிழரசுக் கழகத் தலைவர் மாண்புமிகு ம.பொ.சி. அவர்கள் நாளையதினம் நடத்த இருக்கின்ற மாநில சுயாட்சிப் போராட்டம் குறித்து மாண்புமிகு உறுப்பினர்கள் திரு. சீமைச்சாமி அவர்களும், திரு.ஆ.கு.சுப்பையா அவர்களும் கொடுத்துள்ள இந்த ஒத்தி வைப்புத் தீர்மானம் தேவையில்லை என்பது என்னுடைய கருத்தாகும். ஏனென்றால், இன்றையதினம் ஆளும் கட்சியாக இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம், மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து அதிக அதிகாரங்களைப்பெற்று சுயாட்சித் தன்மையோடு விளங்கிட வேண்டு மென்ற கொள்கையை மிகவும் அக்கறையோடும். தீவிரமாகவும் எடுத்துச் சொல்லி வருகிற கட்சியாகும். இந்தக் கட்சியினுடைய தலைவராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநில சுயாட்சியை வலியுறுத்தி அவர்கள் மறைவதற்கு முன்னால்கூட ஒரு பெரும் கட்டுரையை எழுதி இருக்கிறார்கள் என்பதையும் நாடு அறியும். எல்லாக் கட்சி நண்பர்களும் நன்றாக அறிவார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெற வேண்டு மென்பதில் உள்ள அக்கறையின் காரணமாக முதலமைச்சர் என்ற முறையில் நான் டில்லிக்குச் சென்றிருந்த நேரத்திலும், வேறு பல அறிவிப்புகளிலும் 'மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெற வேண்டும். ஆனால் அப்படிப் பெற வேண்டுமென்று கருதுகிற அதிகாரங்கள் எவை எவை என்று நாம் கூறும்போது, மொத்தத்தில் மூன்று அல்லது நான்கு அதிகாரங்கள் போக மிச்சம் உள்ள எல்லா அதிகாரங்களும் மாநிலங்களுக்கு என்று கூறுவதைவிட திட்டவட்டமாக வரையறுத்து இன்ன இன்ன அதிகாரங்கள் என்று நாமே நமக்குள்ளே வரையறுத்துத் தெளிவுபடுத்திக்கொள்ள