பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



15 ஆட்சிபுரிந்தகாலம் 25வருஷமாக இதில் 100 வருஷங்கள் சென்றிருக்க வேண்டும். அதன் பிறகு சோழமன்னர்களைப்பற்றி ஒன்றுந் தெரியவில்லை . இதில் 50 வருடங்கள் சென்றிருக்கவேண்டும். பிறகு செங்கணானிருந்ததாகத் தெரிகிறது. ஆகையாற் சோழன் செங்கணான் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவனாதல் வேண்டும். இவ்வரசன்காலத்தில், தொண்டியென்னும் நகரின்கண் சேரமான் கோக்கோதைமார்பன் என்னும் ஓரரசனிருந்ததாகப் புற நானூற்றால் தெரிகிறது.