பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



34 வாழ்ந்து வந்தனரென்பது மரபியலாற் பெறப்படுகின்றது. அன்றியும், ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையியலில் கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கள் திறம் உணர்த்துமிடத்து நிலம்பற்றி வாழும் ஐந்திணைமாக்கள் இருந்தமை கூறுகின்றார். அன்னோர் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்து வகை நிலங்களிலும் முறையே வாழ்ந்த குறவர், ஆயர், உழவர், வேட்டுவர், பரதவர் என்போர். அவர்களேயன்றிக் குற்றேவன்மாக்களும் தொழிலாளரும் இருந்தனரென்பது அகத்திணையியலிலுள்ள 'அடியோர் பாங்கிலும் வினைவலர் பாங்கினும்'* என்ற சூத்திரத்தால் அறியக்கிடக்கின்றது. இதுகாறுங் கூறியபல்வகைப் பிரிவினருள் பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரும் எல்லா நிலங்கட்கும் உரியவராய் அக்காலத்தில் விளங்கிய மக்கள் ஆவர். குறவர், ஆயர், உழவர், வேட்டுவர், பரதவர் ஆகிய ஐந்திணை மக்கள் அவ்வந்நிலத்திற்கே உரியவராய் நிலம்பற்றி வாழ்ந்த மக்கள் ஆவர். குற்றேவன் மாக்களும் தொழிலாளரும் ஐந்திணைமாக்களை - அடுத்தவராக அக்காலத்தே கருதப் பட்டுள்ளனரென்பது மேறிகூறிய 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்' என்ற அகத்திணையியற் சூத்திரத்தால் அறியப்படுகின்றது. ஈண்டுத் தொழிலாளர் எனப்பட்டோர் மேற்கூறப்பெற்றவர் தம் வாழ்க்கையை நடாத்துதற்கு இன்றியமையாதவர்களாயுள்ளவர்கள். மேற்கூறிய எல்லோருக்கும் தலைவராய் எல்லா நிலங்களையும் ஆட்சிபுரிந்தோர் அவர்களுள் ஒரு வகுப்பினராகிய அரசர் ஆவர். குறிஞ்சி, முல்லை முதலான ஐவகை நிலங்கட்கும் குறவர், ஆயர் முதலான அவ்வந்திமக்களுள்ளும் தலைவராயினார் உளர்; அன்னோர் குறும் பொறை நாடன், அண்ணல் , ஊரன், மீளி, சேர்ப்பன் என்று அழைக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் அவ்வந்நிலங்கட்குத் தலைவராயினும் எல்லா நிலங்கட்கும் மக்கட்கும் தலைமை பூண்டு விளங்கிய நெடுமுடி வேந்தர்க்குக்கீழ் வாழ்ந்து வந்தனர். . இனி, அக்காலத்தே அறிவர், தாபதர், பரத்தையர் என்போரும் சிறப்புற்று விளங்கினவராவர். அவர்களுள் அறிவர் எனப்படுவார் முக்காலங்களுமுணர்ந்து எல்லாவுயிரிடத்தும் செந்தண்மை பூண்டு பேரறிஞராய் நிலவிய நிறைமொழி மாந்தர். அறிவரே அந்தணரென்று கூறப்பெற்றோர். அவர் ஆணையிற் கூறியனவெல்லாம் மறையெனவும் மந்திரமெனவும் சொல்லப்படும் தாபதர் என்போர் தவவேடமுடையராய் விரதவொழுக்கம் மேற் கொண்டவராவர். பார்ப்பாருள் அறிவரும் தாபதரும் ஆயினார் உளர். ஆனால் அறிவரெல்லோரும் பார்ப்பாரல்லர்; அன்றியும் தாபதரெல்லோரும் பார்ப்பாருமல்லர். எனவே, அறிவரும் தாபதரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவரல்லர். பரத்தையர். காதற்

  • தொல் பொருளதிகாரம், அகத்திணையியல், சூத் - 25.