பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் I 39 சினிமா யோகம், வக்ரத்தோடு வந்தது. சினிமாக்காரர் களுக்கும், கதைகளைத் திருடும் சினிமா எழுத்தாளர் களுக்கும் நேரங்காலம் சொல்லி உற்சாகப் படுத்தினார். அவர்களும் பதில் உற்சாகமாகச் சில நூறு பத்து ரூபாய்களை கொடுத்ததால் மோகினிக்கு அதிக சிரமமில்லை. குழந்தை யோட ராசி என்று, அது பிறக்கு முன்பே நினைத்துக் கொண்டாள். குழந்தையும் பிறந்தது. கருவண்டு விழிகளுடன், பயத்தம் பருப்பு நிறத்தில் அழகாகப் பெண் குழந்தை பிறந்த்து. எல்லோரையும்போல, அவளுக்கும், அவரை'ப் பார்க்க ஆசை வந்தது. இந்தக் குழந்தைய அபார்ஷனாக்கப் பார்த்தவரோடு என்ன சகவாசம்' என்று தன் ஆசையைத் தானே அடக்கிக் கொண்டாள். ஆனால் சீனிவாசனால் ஆசையை அடக்க முடிய வில்லை. குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் கொஞ்சம் பணத்தோடு எங்கிருந்தோ வந்தான்.

  • மோகினி, ஒருத்தருக்கு நான் கடன் கொடுத்திருந் தேன். இப்ப திருப்பித் தந்தார். இதெல்லாம் நம்ம கலா வுக்குத்தான், இனிமேல் ஒழுங்கா இருப்பேன் என்னை நம்பு’’ என்றான்.

மோகினி நம்பியிருப்பாள். அந்தப் பணத்தை நீட்டிய போது, அவன் வாயில் சாராய வாடை வீசியது. அதனால தான் பாசமா பேசறார் போலிருக்கு! மோகினியின் இருதயம் கல்லாகியது. குடிகாரனை வீட்ல வச்சிருந்தா, கலாவோட குடி கெட்டுப்போகும். அப்பன் புத்தி அதுக்கு வந்துட்டா...! வரக்கூடாது . வர விடமாட்டேன். மோகினி, ஆண் புலியிடம் இருந்து குட்டியைக் காக்கும். பெண்புலியாகச் சீறினாள்.