பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 23 வேற்றுவதுமாதிரி... மொத்தத்தில நல்லவங்கதான். என் ஆசையெல்லாம் நான் கண் மூடினபிறகும் என் பிள்ளைங்க இப்போ இருக்கறமாதிரியே இருக்கணும். அதனால ஒனக்கு இந்த வீட்ல தகப்பன் ஸ்தானம், பாஸ்கரன் ஒனக்கு திருப்தி தானடா... மைதிலி ஒனக்கு...? பிடிக்காட்டி அப்பவே சொல்லியிருப்பேனே மாமா... அண்ணனை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. பானுவைவிட, அதிகமாகவே பிடிச்சிருக்கு.' எல்லோருமே சிரித்தார்கள்; செல்வம் அவர்கள் காட்டிய வாஞ்சையில் திக்குமுக்காடினான். இப்படிப்பட்ட பாசபாங்கை பார்த்தறியாத, செல்வத் தின் நெஞ்சம் நெகிழ, மேனி நெக்குருக, தலையை சாய்த்த படி ஒவ்வொருவரையும் பாசம் பொங்கப் பார்த்தான். தணிகாசலம் முடிவுரை கூறினார். நாளைக்கு ஜோஸ்யரைப் பார்த்து நல்லநாள் பார்க் கிறேன். டேய் பாஸ்கர்...ராஜேஸ்வரி கல்யாண மண்டத்தை புக் பண்றதுக்கு ஏற்பாடு செய். எங்க ஜாதியிலேயே இப்படி ஒரு பையன் கிடைச்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். வேற ஜாதிக்காரன், அவன் கடவுளாய் இருந் தாலும், என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆமாம் தம்பி, நம்ப ஆட்கள் பொதுவாய் தஞ்சாவூர்லயும் திருச்சியிலயும்தான் அதிகமாய் இருக்காங்க...திருநெல்வேலி யில நம்ம சாதிக்காரங்க எந்தப் பக்கம் அதிகமாய் இருக் காங்க? மைனாரிட்டியாதான் இருப்பாங்கன்னு நினைக் கேன்; இல்லியா...' செல்வம் நினைவற்றவன்போல் தவித்தான். இதற்கு எப்படி பதிலளிப்பது? பதிலளிக்க முடியும் எஸ். எஸ். எல்.சி. முடித்தவுடன், சென்னைக்கு வந்துவிட்டதால், சரியாய் தெரியாது என்று சொல்லிவிடலாம். அது பதிலுரையல்ல;