பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 I பொறுப்பை உணராத ஒங்ககிட்டே நான் என்னத் தைச் சொல்ல...' பொறுப்பு என்கிறது வேற, ஆசைப்படுறது என்கிறது வேற மேடம்.” ... என்னமோ...என்னால தாங்க முடியல!' ...கலபமாய் தூங்குறதுக்கு ஒரு வழி சொல்லித் தரட்டுமா? உடம்புல இருபத்தேழு சென்டர் இருக்குது. இவற்றை வசியப்படுத்த ஒரு வழி.' மொத்தத்துல, இந்த சத்தத்துக்கான வழி தெரியுமா உங்களுக்கு?’’ அப்போதுதான் செல்வமும் உற்றுக் கேட்டான். கீழே .ஆஹா...ஒஹோ' என்ற ஓங்கார சூச்சல் சோடாபாட்டில் கள் உஷ்' சத்தத்துடன் உடைந்துகொண்டிருந்தன. சிக்கன் டசிக்ஸ்டி சிக்ஸ் தீர்ந்து போச்சுதா ான்ற தின்னிக் குரல்கள். . இன்ஸ்பெக்டர் சாருக்கு இன்னும் கொஞ்சம் போடுங்க. என்ற காக்கா குரல்; பாஸ்கரன், போதையில் நாக்குழறி, . இந்த பாஸ்கரன். நட்புக்காக என்னவேணுமுன்னாலும் செய்வான். ஏய்... மைதிலி பிரிட்ஜை திறந்து கேஸ்டி எடு. தப்பு தப்பு. ஒரு கேஸ் எடு, இன்ஸ்பெக்டர் திம்மையா வுக்கு என்னவேணுமுன்னாலும் செய்யலாம். டேய் இ,ாம், போடுடா...நான் இருக்கேண்டா.போடுடா' திடீரென்று பட்டுபட்டென்ற சத்தம். பாஸ்கரன் நண்பர்களுக்காகவே தான் இருப்பதாகவும் மார்தட்டும் சத்தம். புதிய பாஸ்கரனையும், புதிய சூழலையும் கண்டு விட்ட ஆதங்கத்தில், செல்வம், தன் மடியில் சாய்ந்த பானு வின் தலையை உருட்டியபடியே அசைவற்று இருந்தான். திடீரென்று கதவு தட்டும் சத்தம். பானு எழுந்து கதவைத் திறந்தாள். பாஸ்கரன் மகள் பாமா. 'அத்தெ, அத்தே, இங்கேயே படுத்துகிறேன் அத்தே’ என்றபடி கண்