பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 81 பின்னர் அப்படி நினைத்ததற்குப் பிராயச்சித்தமாக சிவ சிவா...' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே மோகினி யைப் பார்த்து, பாப்பா...இங்கதானமா நீ இறங்கணும்?" என்று கேட்டபோது, மோகினி அப்போதுதான் நினைவு வந்தவள்போல், அந்தக் குழந்தையைப் பிரிய மனமில் லாமல் அதன் தலைமுடியைத் தடவிவிட்டு இறங்கினாள். இருவரும் காதலர் பாதை வழியாக நடந்தார்கள். எவ்வளவு அழகா இருக்கு... எவ்வளவு அழகா இருக்கு" என்று சொல்லிக்கொண்டே மோகினி. சீனிவாசனைப் பார்த்தாள். சீனி பதில் பேசாமல் இருப்பானா? இருக்க வில்லை. - "இந்த சட்டை,தானே... கெஜம் நாற்பது ரூபா. நல்லா இல்லாம எப்படி இருக்கும்?’’ "மண்ணாங்கட்டி. நான் பஸ்லே பார்த்தேனே...அந்தக் குழந்தையச் சொன்னேன். குறஞ்சுது இன்னும் ஒரு வாரத் துககு அந்தப் பையனை என்ன்ால மறக்க முடியாது." அந்தப் பையன் கிடக்கிறான் விடு! இப்ப இந்தப் பையனப் பாரு' தங்க . உண்மையிலேயே பையன்தான். இன்னும் மெச்சூரிட்டி வரல!' . ஏன் அப்படிச் சொல்றே..." பின்ன என்னவாம்... பஸ்ல நாலுபேரு பாக்றாப்போல அப்படித்தான் கையைக் கால ஆட்டுறதா...' ஒளிவாசன் நீ மட்டும் ஆண்பிள்ள மாதிரி ஓவர்டேக் பண்ணும்படியா டிரைவர்கிட்ட சொல்லலாமா...' என்று கேட்கலாமா என்று நினைத்தான். அப்படிச் சொன்னால் அவள் அங்கேயே அவனை விட்டுவிட்டுப் போய்விடுவாள் என்ற சரியாக்ஷனை' நினைத்து வயதுவராத பையன்மாதிரி அவளுக்கு இணையாக நடக்கப் பயந்தவன்போல் பின்னால் நடந்தான். 6 سه بود