பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

15




நடக்கும் காவியம்; நாட்டில் மடமை
முடக்கு வாதத்தை முறிக்கும் மருந்து.
ஏழைகட் கேந்தல்; இல்லா தாரை
வாழ வைக்க வந்த காவிரி.
வாழிய அண்ணா பெரும்புகழ்
ஆழிசூழ் தமிழகம் அமைதி காணவே!