பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழே நீயென் தாயே!




கணுக்களில்லாச் செங்கரும்பே!
கவிதைத்தேன் காவிரியே!
கண்ணே! என்றன்

அணுக்களெல்லாம் கசிந்தூறி

ஆவியினை வளர்க்கின்ற
அமுதே! காதல்

மணக்கவரும் பூங்காற்றே!

மறத்தமிழர் கருத்தூற்றே!
மாந்தர் வாழ்வின்

நுணுக்கமெலாம் கருக்கொண்டு

நோகாமல் பெறுந்தாயே!
நீயென் தாயே!