சந்திரமோகன்
133
சிவா : அரச சபையை அவமதித்த உன்னை நமது மெய்ப் பாதுகாவலர் வேலையின்றும் நீக்கிவிட்டோம்.
மோக : மகராஜ்! எனக்கா இந்தத் தண்டனை?
சிவா : தண்டனையின் முழு விவரமும் கூறியாகவில்லை. நாளை சூரியோதயத்துக்குள் நீ தலைநகரைவிட்டுப் போய் விடவேண்டும்?
மோக : தேசப்பிரஷ்டமா?
சிவா : அரச சமூகத்திற்கு நீ தகுதியற்றவன்! போ.
(வீரர்கள் நெருங்க)
வீரர்களே! விலகி நில்லுங்கள். அவன் போவான்! சர்தார்!
(போகிறான்)
காட்சி - 28
இடம் : வீதி
உறுப்பினர்கள். : சாது, ரங்கு.
(சாது பாடிக்கொண்டு வர, ரங்கு எதிரே வந்து)
ரங்கு : இது யாருடைய பாடல்?
சாது : ஐயனுடைய பாடல்?
ரங்கு : அது யாருடா அவன் ஐயனும் மெய்யனும்?
சாது : கோபமாகப் பேசும் தங்களையும், சாமான்யனான என்னையும் எவன் படைத்தானோ அவனே சர்வ லோகங்களிலும் நடக்கும் காரியத்துக்குக் கர்த்தா. அவன் அருளால் இந்தக் கீதம் பாடினேன். ஆகவேதான் தாங்கள் யாருடைய பாடல் என்று கேட்டவுடன் ஐயனுடைய பாடல் என்று சொன்னேன்.
ரங்கு : ஏண்டா! நீ பெரிய வாயாடியா இருப்பபோல இருக்கே. சமஸ்கிருதம் தெரியுமோ, நோக்கு?
சாது : தெரியாது.
ரங்கு : காயத்திரி தெரியுமோ?
சாது : தெரியாதய்ய.