பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

102 வசதிக்கும் உதவும் விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளைப்பற்றிய முக்கியமான தகவலைத் தெரிவிக்கும் நூல் இருக்க வேண்டும். நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள். மக்களின் மன மாசு துடைத்தவர்கள்; தொலை தேசங்களைக் கண்டவர்கள் வீரர்கள், விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைத்துக் கொண்டால், நாட்டுக்கு நல்ல நிலை ஏற்யுடும். வீட்டிற்கோர் மத்தகசாலை தேவை - ஆனால் கேட்டினை நீக்கிடத் தக்க முறைகளைத் தரும் ஏடுகள் கொண்டதாக இருக்க வேண்டும் வீட்டிலே அமைக்கும் புத்தகசாலை.