பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

106 மக்கள் மருண்டிருந்தால் மருட்சியை நீக்குவது, மக்கள் கவலையற்று இருந்தால், பிரச்னையின் பொறுப்பை உணரச் செய்வது, போன்ற காரியம். மக்கள் கொண்டுள்ள கருத் துக்கு முற்றிலும் மாறானவற்றையே கூறியாகவேண்டிய நிர்பந்தமூம் மேடைப் பேச்சாளனுக்குச் சில சமயம் ஏற் படக்கூடும். பேச்சைக் கேட்க வருபவர் அனைவரும் ஒத்த கருத்தினர் அல்லர், இந்நிலையில் மேடைப் பேச்சு இனிமை பயப்பது மட்டுவே குறிக்கோள் என்று கொண்டால் நடவாது-ஆகாது. அவன் நாவில் சரஸவதி தாண்டவமாடுகிறாள் என்று புகழ்வதும், 'தம்பி என்னடா சண்டைப் பிரசண்ட மடிக்கிறார் - வீசு மலைப்பிஞ்சுகளை என்று ஏசுவதும், ஏக காலத்தில் நடைடுமறும் விநோதபுபுரியிலே இருக்கிறார் மேடைப் பேச்சாளி எந்த பேச்சு பலருக்கு இனியதாய், பயனுடையதாய் அறிவு நிரம்பியதாய்த் தோன்றுகிறதோ, அதே பேச்சு வேறுசிலருக்குச். சுடு சொல்லாய், வெட்டிப் பேச்சாய், ஞான சூன்யமாய்த் தோன்றக்கூடும், அவரவர் அந்தந்த எண்ணத்திற்கு ஏற்ப நடவடிக்கைகளிலும் ஈடு படக்கூடும். தென்றல் என்பர் சிலர்; புயல் என்பர் சிலர்; தேனினும் இனியதென்பர் சிலர்; கர்ணகடூரம் என்பர் சிலர்; வீணுரை என்பர் சிலர்; விவேக சிந்தாமணி என்பர் சிலர்: இதிலே கவனம் செலுத்தக்கூடாது; மேடைப் பேச்சு ஒரு பொறுப்புள்ள பணியாகவும், பயன் தரும் கவியாகவும் இருத்தல்வேண்டும் என்ற நோக்கமுடையோர் அச்சம், தயை, தாட்சணியத்துக்குக் கட்டுப்பட்டு கருத்தை அடதுவைக்கும் குணமும் இருத்தலாகாது; காட்டுக் குதிரை மீதேறிச் செல்லும் முரட்டுச் சுபாவக்காரனின் கைத்தடி போன்ற போக்குத்தான் வீரமுழக்கம் என்றும் கருதலாகாது. இந்த இரண்டு வழுப்புப் பாதைக்கும் இடையே உள்ள நல்வழி, இன்னது என்று அறுதியிட்டுக் கூறமுடியாது, அந்தப் பாதை. பாடுபட்டு அவரவர்கள் கண்டறியமட்டுமே முடியும். ஆனால் அதற்கு. பேசுபவர் களுக்குத் தாம் பேசும் பொருளின் ஆழ்ந்த நம்பிக்கையும் மதிப்பும் இருப்பதுபோலவே. மன்றம் வரும் மக்களிடம் மதிப்பும் நம்பிக்கையும் வேண்டும். பேச்சு இனிமையாக .