பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70 பரித்த தூக்கு மேடையைத் துதைத்தனத்தின் முதல் மந்திரியாகக் கொண்டு, கொடுங்கோலாட்சி புரிந்த மன் னர்கள், ரணகளச் சூரர்கள் காலத்தையும் கடந்து மக்க ளாட்சி முறையெனும் இக்காலத்துக்கு வந்துசேருவதற்கு நடாத்திய பயணம் மிகமிக நீண்டது. நெஞ்சுருகும் சம்ப வங்கள் பலப்பல கொண்டது: மிக மிக சிரமமானது. இந்தப் பபணத்திலே மனிதன் சிந்திய இரத்தமும் கண்ணீ ரும் கொஞ்சமல்ல. பல சுடலைகளைக் கடந்து இந்த நிலைக்கு வந்தான், பல போராட்டங்களுக்குப் பிறகு, பல முறை திகைத்திருக்கிறான், பலமுறை தியாகத் தீயிலே குளித் திருக்கிறான். பயணம் மட்டும் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது. வீழ்ந்தவர்போக, மற்றவர்கள் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினர்; வெற்றியும் பெற்றனர். உயர்ந்த ஜாதிக்காரர், கொழுத்த பணக்காரர், தேர்ந்த தந்திரக்காரர், மிகுந்த வடிவுள்ளவர் என்று எந்தக் காரணத்தைக் கொண்டாகிலும் ஒருவர் மற்றவர்மீது ஆதிக் கம் செலுத்துவதற்கு வழி அமைந்து விடுமானால், அங்கு ஏட்டிலே எவ்வளவுதான் சிறந்த முறையில் சுதந்தரத்தின் கோட்பாடுகள் - சாசனம்-தீட்டப்பட்டிருப்பினும், உண்மை யான சுதந்தரம் மலராது நிலைக்காது. ஒரு சிலர், உயர்ந்த ஜாதியினர் என்று கூறப்பட்டு, மக்களால் நம்பப்பட்டு, அந்த நம்பிக்கை முறியாதிருக்க ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு விடுமானால், பிறகு அவர் கள் மற்ற மக்களைத் தமது இஷ்டம்போல் ஆட்டிப படைக்க முடியும். செல்வத்தால் இடைக்கும் சக்தியைக் கொண்டு சுதந்தரத்தைச் சூறையாடிவிட முடிகிறது. இவரை எதிர்த்து நாம் என்ன செய்ய முகுயும்? அவர் நம்மைப் பணத்தாலேயே அடித்தும் கொன்றும் வீடுவார். என்ற அச்சம் பிடித்தாட்டும்போது, சுதந்திரமாகச் சிந்திக் கவோ, நடந்து கொள்ளவோ எப்படிச் சாத்தியமாகும்?