பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

விதிக்கு அடிமைத்தனம் ஓரிரு நூற்றாண்டுகள் அந்நிய ஏகாதிபத்தியத்திடம் சிக்கிச் சீர்குலைந்திருந்த தாயகம் விடுதலைபெற்று விட்டதை உலகுக்கு உவகையுடனும், பெருமிதத்துடனும் அறிவித்து விட்ட நாம் -- அடிமைத்தனம் அடியோடு. பூண்டோடு அழிந்துவிட்டதா? இன்னும் ஏதோனும் நமக்குத் தெரிந் தும் தெரியாமலும், அடிமைத்தனம் நம்மிடம் இருந்து கொண்டு நம்மை ஆட்டிவைக்கிறதா என்று,நம்மை நாமே கேட்டுக் கொண்டாக வேண்டும் - கண்டு பிடித்தாக வேண் டும் - காரணம் தெரிந்தாக வேண்டும். நாம் இதைச் செய் யாவிட்டால் - நமக்கு முழு வாழ்வும் புது வாழ்வும் கிட்டாது என்பது மட்டுமல்ல, நானிலம் நகைக்கும். அதோ பார்! விழிகளில்லா குருடன் விலங்கொடித்தேன் என்று வீரம் ம் பேசுகிறான் ! தன்மீது பூட்டப்பட்டுள்ள வேறு விலங் குகளை உணராமலேயே, என்று கேலி பேசும். எனவேதான், நாம் எகெதற்கு அடிமைப் பட்டிருந் தோம் - எதையெதை நீக்கிவிட்டோம் - மேலும் நீக்கப் படவேண்டிய அடிமைத்தனம் என்பதுபற்றி,நம்மிலே நேர்மையில் நாட்டமும், நெஞ்சில் உரமும் கொண்டவர்கள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது மிகமிக முக்கியமான கடமையாகிறது. அடிமைத்தனம் ஓர் கூட்டுச்சரக்கு. அடிமைத்தனம் ஏற்படுவதற்காண காரணங்களை ஆராய்ந்தாலும்,அடி மைத்தனம் என்பது ஒரு கூட்டுச்சரக்கு என்பது தெரியும். கந்தசாமிக்குக் கடும் ஜூரம், ஜூரத்தின் காரணமாகக் கைகால் பிடிப்பு. கண்ணில் பஞ்சடைப்பு மார்பிலே வலி இவ்வளவும் ஜூரத்தைப் போக்க மருந்திடுகிறார் மருத்து வர் ஜூரம் போகிறது - மறைகிறது - முகம் மலருகிறது. ஜூரம் போய்விட்டது வைத்தியரே! ஆனால் கை கால்