பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

81 - விதி என்றும், சப்மரைன், டார்பிடோ, விமானம், விஷப்புகை வெடிகுண்டு இவைகளைப் போன்ற படைக் கலங்களைக் கொண்டு இல்லை. அப்படிப்பட்ட படைக்கலங் களைக் கொண்ட ஒரு ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட்ட நமக்கு, இந்த நாளில் சாதாரண எடுகள் அதி லும் காலமெனும் செல்லரித்த ஏடுகள். அவைகளிலே காணப்படும் கருத்துக்குக் குழப்பம் தரும் கற்பனைகள், அந்தக் கற்பனைகளை நம்பிப் பிழைக்கும் கபடர்கள் ஆகிய இவ்வளவு படைக் கருவிகளை மட்டுமே கொண்டுள்ள விதிக்கு அடிமைத்தனம் என்றும் பழமையை முறியடிப் பது முடியாத காரியமல்ல ; ஒரு பலமான தாக்குதல் - அறி வுப் பணிபுரியும் பலரும் கொண்ட ஒரு கூட்டுப் படையி னால் ஒரு அறப்போர் - ஒரு தன்னல மற்ற முயற்சி எடுத் தால் நமது நாட்களிலேயே மக்கள் வாழ்விலே நஞ்சு கலக்கும் இந்த அடிமைத் தளையை வீழ்த்த முடியும் - புது வாழ்வு மலர முடியும். செய்வோமா?