பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

91 ஸ்தாபனத்தின் ஐக்கியம் கெட்டுவிடத்தக்க நிலைமைகள் ஏற்படும்போது, அக்கறையற்று இருந்துவிடவும் கூடாது. தொழிலாளர் ஸ்தாபனம். மனக்குறையின்மீதும், அதனால் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆத்தரத்தின் மீதும், ஏற் பட்டுவிடுவது உண்டு. இவை சரியான அடிப்படை அல்ல, வாழ்வதற்கு உழைக்கிறோம். ஆனால் வாழ்வு இல்லை. உழைக்காது வாழ்கிறார்கள். அந்த வாழ்வுக்குத் தங்குத் தகூட இல்லை. வாழ்வோய் அனைவரும் - வாழ உழைப் போம் - ஒருவர் உழைப்பின்மீது மற்றொருவரின் - வாழ்வு அமைக்கப்படும் அநீதியை ஒழிப்போம் - என்ற அடிப்படை களின் மீது கட்டப்பட்டுள்ள தொழில் ஸ்தாபனங்கள் அந்த உன்னதமான இலட்சியம் ஈடேறவேண்டும் என்ற பெரு நோக்கத்தை உறு துணையாகக் கொண்டு ஸ்தாபனத் தின் நடைமுறை வேலையில்,உறுப்பினர்களுக்குள் உள்ளக் கொதிப்போ, கசப்போ ஏற்படாதவகையிலும், இன்னார் செய்கிற காரியம், இன்னாருக்குச் சரி என்று படவில்லை. என்ற நிலை ஏற்படாதவகையிலும், ஸ்தாபனத்தின் வேலை களில், அவரவர்களுக்கு அவரவர் ஆற்றலுக்கேற்ற,ஆனால். ஸ்தாபனத்தின் மூலக் கொள்கைக்கு ஊறு நேரிடாத முறையில், பணி உண்டு என்ற முறையில், ஸ்தாபனத்தை நடத்திச் சென்றால், ஸ்தாபன ஐக்கியம் கெடாது. பலனும் நிச்சயம் விளையும். ஸ்தாபனத்தின் பலம் வளரும்போது ஏற்படும் அல்லல் அதிகம்--ஸ்தாபனம் வளரும்போது இருக்கும் ஸ்தாபன ஐக்கியம், ஸ்தாபனம் நன்றாக வளர்ந்த பிறகு, ஓரளவு ஆபத்துக்குள் சிக்கிவிடக்கூடும்- வளர்ந் துள்ள பலத்தைக்கொண்டு என்ன செய்வது? எவ்விதம் அதைச் செய்வது? யாரைக்கொண்டு செய்வது? எப்போது செய்வது? என்ற பிரச்சினைகள். ஸ்தாபனத்தின் பலம் வளர்ந்த பிறகு ஏற்படும். ஐக்கியத்துக்கு ஆபத்து அதனால் வரக்கூடும். அந்த நெருக்கடியான நேரத்திலெல்