பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 117

கடவுள் ஒருவர்தான் அழிவிலாத மணியாக நின்று மனிதனின் மனத்தில் அமைதியெனும் நிலையினை அருளுகின்றார்.

மூன்றாவது தொடர் தெரிந்து முக்காலமும் உணர்ந்து துறந்தவர் இதயாசனத்து இருந்தவன் என்பதாகும்.

வாழ்க்கையில் ஒருவரைத் தெரிந்து கொள்வது வேறு; உணர்ந்துகொள்வது வேறு. தெரிந்துகொள்வது என்பது மேற்போக்கான அறிமுகமாகும். கண்ட மாத்திரத்தில் ஒருவரைத் தெரிந்துகொள்ள முடியும்; ஆனால் அவரோடு நெருங்கிப் பலமுறை பழகினால்தான் அவரை உணர்ந்து கொள்ள முடியும். அதுவும் உணர்ச்சியோடு அளவளாவி நெருங்கிப் பலமுறை பழகிய பின்னரே ஒருவரை உள்ளவாறு உணர்ந்துகொள்ள முடியும். எனவே உணர்தல் என்பது ஆழ்ந்த பொருளைத் தருகின்றது. இந்த உலகத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்றார்கள். அதாவது நல்ல பெரியவர்கள்-சான்றோர்கள்-தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் பெரியோர்கள் வாழுகின்ற காரத் தினால்தான் இந்தவுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்னு கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்னும் சங்ககாலப் பாண்டிய மன்னன் ஒருவனும் பாடிவிட்டுப் போயுள்ளான்.

இத்தகைய பெரியவர்கள் இறந்த காலம், நிகழ் காலம் எதிர்காலம் என்று மூன்று காலங்களையும் முற்ற அறி ை க. நமக்கு இறந்த காலத்தில் நடந்தவை தெரிய, நிகழ்காலத்தில் நடைபெறுவதை ஒரளவு அறிகிறோ, ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்க

சம.-8