பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சமயந்தொறும் நின்ற தையலாள்

விருக்கின்றது என்பது ஓரளவும் தெரியாது. ஆனால் எப்பொருளையும் தெரிந்து, வாழ்க்கையின் பரந்துபட்ட அனுபவத்தால் முக்காலங்களையும் முறைப்பட உணர்ந்த பெரியோர்கள் இந்தவுலகின் நிலையற்ற தன்மையை யறிந்து இந்தவுலக இன்பங்களைத் துறந்து நிற்பர். திருமூலர் என்ற சான்றோர் இந்த உலக இன்பங்களின் தன்மையினை ஒரே பாட்டில் அதிக ாகக் குறிப்பிட்டு உள்ளார்.

அடப்பண்ணிவைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு,மந்தனங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிங் தாரே.

-திருமந்திரம் : 148

தம் மனைவியிடம் அறுசுவையோடு கூடிய நல்ல உணவினை ஆக்கச் சொன்னார் ஒரு வீட்டின் தலைவர். ஆரூயிர் மனைவி அருமையாகச் சமைத்த உணவினை இனிதாக உண்டு மகிழ்ந்தார். பின்னர் மனைவியோடு இன்பப் பேச்சுகள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இடப்பக்கத்தே சிறிது நோவு எடுக்கின்றது என்றார். அவ்வளவுதான்! சிறிது நேரத்தில் அவர் வாழ்வு முடிந்து விட்டது. இவ்வாறு திருமூலர் இவ்வுலகில் உயிர்களின் நிலையாமையினை நம் நெஞ்சில் தைக்கும் வண்ணம் சொல்லுகின்றார்.

எனவே, உலக வாழ்க்கையின் இயல்பினைக் கண்டவர்கள் இவ்வுலக இன்பங்களைத் துறந்து வாழ்வார்கள.