பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயந்தொறும் நின்ற தையலாள்

பாரதத் திருநாட்டில் இடம்பெற்றுள்ள மேற்சுட்டிய திருத்தலங்கள் மக்களுக்கு முத்தியளிக்கக் கூடிய தலங் களாக இருப்பதுடன், மக்களிடையே நேய உணர்வை வளர்க்கவும், அதன் வாயிலாக ஒருவரை ஒருவர் மதித்துப் போற்றி வாழவும், குறுகிய மனபபான்மையிலிருந்து விடுபட்டு உலகந்தழுவிய மணிக நேய உணர்வைப் போற்று மாறு விரிந்து பரந்த விசாலமான உளப்பாங்கைப் பெறவும் பெரும் பங்களிக்கின்றன. இவை நம் நாட்டின் அருள் நலத்தை உலகோர்க்கு எடுத்துக்காட்டும் வளம் கெழுமிய திருத்தலங்கள். இத்தலங்களைப் போற்றுதல் நம் தலையாய கடமையாகும்.