பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சமயந்தொறும் நின்ற தையலாள்

தெய்வம் என்கின்றார். "இப்பூவுலகத்தில் உள்ளவர்கள் உண்மைத் தெய்வத்தை உள்ளபடியே உணர்ந்ததாகத் தெரியவில்லை. அந்தத் தேவர்தான் சிறந்த தேவர்; அவர்தான் எல்லாம் வல்ல தேவர் என்று இவ்வாறு பொய்த்தெய்வங்களைப்பற்றிப் பேசிப் புலம்புகின்றனர். இவ்வுலகிலே நான் உண்மைத் தெய்வத்தை உணர்ந்தேன். வேறு ஒரு பற்றும் எனக்கில்லை. என் பற்று முழுவதும் அழிந்து போக வேண்டும். அந்த உண்மையான தெய்வத் திடம் நான் ஆராத அன்பு கொண்டுள்ளேன். ஏ! வண்டே! நீ அந்தத் தேவதேவனிடம் தூதாகச் செல்ல வேண்டும்; என் ஆவலை எடுத்து மொழிய வேண்டும். இதுவே நீ எனக்குச் செய்யத்தக்க உதவி" என்று வண்டை நோக்கி மணிவாசகப் பெருந்தகையார் உரைக்கின்றார்.

அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்கன் பொய்த் தேவ பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிகின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்று தாய் கோத்தும்பீ

- திருக்கோத்தும்பி : 5

எங்கள் மனவிருள் கடந்த முதல்வனே! அரசனே! இந்திரன், பிரமன், திருமால் என்போர் பதவிகளை ஒரு பொருட்டாக மதியேன். என் வாழ்விற்கு முடிவு ஏற்பட்டாலும், உன் னு டை ய அடியாரோடன்றிப் பிறரோடு நட்புக்கொள்ள மாட்டேன். நரகம் புகுந் தாலும், அங்கே உனது திருவருளுணர்ச்சியோடு இருக்கப் பெற்றால், அதனை இகழமாட்டேன். உன்னையொழிந்த வேறு தெய்வங்களை மனத்தாலும் நினைக்கமாட்டேன். என்று மிக்க மனவுறுதியோடு மொழிகின்றார் மணி வாசகர் :