பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

உற்பத்தியைப் பெருக்குவது மட்டும் போதாது; உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஏற்ற முறையிலே சர்க்கார் திறமையுடன் விநியோகிக்க வேண்டும். தொழிலாளர்களின் நலிவைப் போக்குவதிலே சர்க்கார் நாட்டம் செலுத்த வேண்டும். மேதிருநாளாகிய இந்த நல்ல நாளில் மக்களிடையே காணப்படும் மூடப் பழக்க வழக்கங்களை முறியடித்து ஜாதிமதக் கோட்டையைத் தகர்த்து சுக்குநூறாக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் வாக்குறுதியாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

மேதினத்தை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாட உதவி புரிந்த அன்பர்களுக்கெல்லாம் கழக சார்பாக என்னுடைய நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.