தா. பார்த்தசாரதி 83
இன்னிக்கு காலையிலே எழுந்திரிச்சதுமே அவன் எங் கிட்ட வந்து என்ன வாத்தியாரே? பீச்லே சுத்தினி யாமே?'ன்னு ஒரு தினுசாக் கேட்டான். அப்ப நான் என்ன நெனைச்சு சந்தேகப்பட்டேன் தெரியுமா? நீதான் கோபாலுக்கு ஃபோன் பண்ணியிருப்பியோன்னு நினைச் சேன். உண்மை என்னன்னா அவனே டிரைவரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டிருக்கான்.'
'அது எப்படியாவது போகட்டும், இப்பக் காரி யத்தைக் கவனியுங்க...'
"எப்படி அவ்வளவு சுலபமா விட்டுடமுடியும்? இத் தினி பேச்சும் அதனாலே தான் வந்தது!'
"இருக்கட்டுமே; அப்புறம் தனியா நாம ரெண்டு பேரும் பேசிக்கலாம். இப்ப- ஜில் ஜில்' ஆசிரியர் கனி யழகனோட கோபால் இங்கே வருவாரு. எல்லாருமா நாடக சீன்கள் பார்க்கறத்துக்காக ஆர்ட்டிஸ்ட் அங்கப்ப னோட எடத்துக்குப் போறோம்.'
கோபால் உங் கிட்டச் சொல்லிட்டுப் போனானா!'
"ஆமாம். இப்பக் கொஞ்ச நேரத்திலே ஜில்ஜில் லோட வந்துடுவாரு...'
"அது யாரு ஜில் ஜில்? ஏதாவது ஐஸ்ஃபேக்டரி வச்சி ருக்கானா என்ன?"
'இல்லே! "ஜில்ஜில் லுங்கறது அவரு நடத்துற சினி மாப் பத்திரிக்கை. ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனுக்கு அவரு பெஸ்ட் ஃபிரெண்ட்."
'ரெண்டு பேருக்கும் நம்ம கோபால் ஃபிரண்டாக் கும்.'
"ஆமாம்! இவரு ஒரு வார்த்தை நாக்கு அசைச் சார்னா எத்தனையோ ஸ்டுடியோக்காரங்க பிரமாதமான nன்ஸ்-ஸெட்டிங்ஸ் எல்லாம் தயார் பண்ணிக் கொடுப்