இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33 சலோம்
சிரியா இளைஞன் :
இளவரசி, இளவரசி ஐயோ!
சலோம் :
சோகனான், நான் என்ன செய்ய வேண்டும் சொல்லு!
வாய்திறந்து மீண்டும் பேசு.
சோகனான் :
சோடாம் புதல்வியே, என் அருகில் வராதே! முகத்தைத் திரையால் மூடிக்கொள். தலையிலே சாம்பலைத் தூவிக்கொள். பாலைவனத்திற்குப் போ. அங்கே, மனித குமாரனைத் தேடு.
சலோம் :
அவன் யார்? மனித குமாரன் யார்? உன்னைப்போல இவ்வளவு அழகாக இருப்பானா, சோகனான்?
சோகனான் :
அப்பால் போ அரண்மனையிலே காலதேவனுடைய சிறகு ஒலி கேட்கிறது.
சிரியா இளைஞன் :
இளவரசி, உங்களைக் கெஞ்சுகிறேன், உள்ளே போங்கள்.
சோகனான் :
தேவதூதர் வாளை வைத்துக்கொண்டு இங்கே என்ன
செய்கிறாய்? மாசு நிறைந்த இந்த அரண்மனையிலே யாரைத்
தேடுகிறாய்? வெள்ளி உடை அணிந்தவன் மாளப்போகும் நாள்
இன்னும் வரவில்லை.
சலோம் :
சோகனான்!