சாமியாடிகள்
253
சாமியாடிகள் 253
"அந்தக் கவல வேண்டாம் ஸார். நான் எது சொன்னாலும் யோசிச்சு சொல்லுறவன். அப்புறம் ஸார். எங்க சுடலமாடன் கோவில் கொடைய கரும்பட்டையான் கூட்டம் தடுக்காம இருக்கணும். எதுவும் ஏடாகூடமாய் செய்துடுவாங்களோன்னு பயமாய் இருக்குது."
"கவலப்படாத டி.எஸ்.பி. கிட்ட பேசிட்டு, ஆயுதப் போலீஸயே அனுப்பி வைக்கேன். குரூப் கிளாஸ் ஏற்படாம தடுக்கணுமுன்னு நான் சொல்றதை அவரு தடுக்கமாட்டாரு. தட்ட முடியாது. இந்த மாதிரி சித்தி கிடச்சது ஒன்னோட லக்குய்யா."
"இல்ல நீங்க எங்களுக்கு கிடச்சதுதான் லக்கு. அப்புறம் எசமான். ஊர்ல நாங்க உயிரோட லாந்தணுமுன்னா."
"யோவ் முனுசாமி. உடனடியாய் போய், பழனிச்சாமி. மாயாண்டி"
"பேச்சியம்மாவும் எசமான்."
"ஆமா, பேச்சியம்மாவையும் கையோட கூட்டிவா. எதுக்கும் விலங்கு எடுத்துட்டுப் போ..."
30
சட்டாம்பட்டி சந்து பொந்துகள் கூடச் சத்தமிட்டன.
ஊர்ப் பொதுக் கிணறுகளில் தோண்டிப் பட்டைகள் மூலம் தண்ணிர் பிடித்த பெண்கள் மத்தியில், கோலவடிவுப் பேச்சு. ஒரு சிலரின் தோண்டிப் பட்டைகள் பேச்சுக் கவனத்தில் தொழில் வேகம் போய் மூலப்படியில் மோதிக் கிடந்தன. அவற்றைப் பார்க்காமலே அவர்கள் புஷ்பத்தின் கற்பழிப்பு விவகாரத்தை மனதுக்குள் படம் போட்டுப் பார்த்து வர்ணனை கொடுத்தார்கள். ஊராட்சி போட்ட உருப்படாத குழாயடிகளிலும் இதே பேச்சு. ஆயிரம் சண்டை