பக்கம்:சாமியாடிகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

291

சாமியாடிகள் 291

நிரபராதிகள உருட்டி. மிரட்டி எதிரி கோவிலுக்கே கூப்பிடறதும். சொன்னபடி போகாட்டா விரட்டுறதும். நல்லா இருக்கா? சும்மா ஒரு புகார் கிடச்சுட்டு என்கிறதாலே. கண்மண் தெரியாம ஆடுறதா. ஏற்கெனவே படுற அவமானம் போதாதுன்னு, நீயும் அவமானப் படுத்துனா என்னய்யா அர்த்தம்? எங்களுக்கு மட்டும் ஆளில்லையா என்ன? விலங்கு போட்டு கூட்டிட்டுப் போய்யா. அப்படியாவது என் திருமலையை நான் பார்க்கலாம்."

பழனிச்சாமி போட்ட கூச்சலில் ஊரில் பாதி கூடி விட்டது. காத்துக் கருப்பன்கள், காரை வீட்டுக்காரர்கள், ஒத்தை வீட்டுக்காரர்கள், ஆசாரிக் கூட்டம், கோனார் சாதியினர், சேரிக்காரர்கள். கடந்த ஒரு நாளில் போலீஸ்காரர்கள், பந்தோபஸ்து என்ற பெயரில் கண்டவர்களை எல்லாம் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதும், எலி டாக்டர் வீட்டில் என்னெல்லாமோ சாப்பிட்டதும், ஊர் மக்களிடம் ஒரு உக்கிரத்தை ஏற்படுத்தியது. ரஞ்சிதம் பீடிப் பெண்களோடு வந்தாள். சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் போய் சவாலிட்டாள். "சாதாரண மனுஷன் பட்டை போட்டுட்டு ஆடுறான். நீங்க சர்க்கார் யூனிபார்ம் போட்டுட்டு ஆடுறிங்க சினிமாப்பயல்க எங்கள்கிட்ட முறைகேடா நடந்ததா புகார் கொடுத்தேனே. அதுக்கு ஆக்ஷன் எடுத்தியா? இதோ புஷ்பம், இவள் கற்பு திருமலையால போயிட்டுதான்னு தீர விசாரிச்சியா? புஷ்பா நீயே சொல்லு."

புஷ்பம் விம்மினாள். "இல்ல இல்ல, சண்டாளி முண்ட அலங்காரி சோடிச்சா. இந்த சப்-இன்ஸ்பெக்டரும் நம்புறமாதிரி நடிச்சார் என்ன பேசவே விடலே."

"இப்ப என்ன ஸார் சொல்றீங்க. பொய்ப் புகார் கொடுத்த துளசிங்கத்தையும் அலங்காரியையும் கைது செய்ங்க பார்க்கலாம். அப்போதான் நீங்க நிசமான போலீஸ்.. இல்லன்னா போலி. இந்த ஊர்ல. தடிமாடு மாதிரி திரிய வச்சிருக்கியே துளசிங்கம். அவன்கிட்ட அந்த கோலவடிவ எங்கேடான்னு கேட்டியா?”

இடுப்பில் உள்ள துப்பாக்கியில் கை வைக்கப் போன சப்-இன்ஸ்பெக்டரை, அருணாசலம் இழுத்துப் பிடித்தார். கல்லைத் தூக்கப் போன பற்குணத்தை, நாட்டு வக்கீல் மடக்கிப் பிடித்தான். எவரோ இரண்டு பேர் முகங்களைக் காட்டாமல், சப்-இன்ஸ்பெக்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/293&oldid=1244134" இலிருந்து மீள்விக்கப்பட்டது