பக்கம்:சாமியாடிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

75

சாமியாடிகள் 75

கோலவடிவு, ஆள் அரவம் கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பினாள். அந்த அச்சத்தைக் காட்டுவதுபோல் ஊசியாய் ஒன்றான உதடுகள், சிவப்புச் சிப்பியாய் மலர்ந்தன. அலங்காரி, தோளில் புடவைகளை முதுகுப் பக்கமும், மார்புப் பக்கமும் தொங்கப்போட்டு வலது கையில் கலர் கலராக ஜாக்கெட்டுக்களையும், வெள்ளைப் பாவாடைகளையும், ஈரஞ் சொட்டச் சொட்ட இடுப்போடு சேர்த்து அணைத்தபடி, கோலவடிவின் மேல் ஒரு ஈரப் பார்வையை வீசியபடி கேட்டாள்.

"ஒன்ன மாதிரி பெரிய இடத்துப் பொண்ணுவ இப்டிப் பட்டப் பகலுல பப்ளிக்கா குளிச்சா நல்லதாம்மா."

"போங்கத்த. பொல்லாத பெரிய இடம். பெரிய இடமுன்னு நம்மள நாமே சின்ன இடத்துல பூட்டிக்கது தப்பு."

"அப்போ அத்தைய மாதிரி குளத்துல வந்து குளிக்கது." "குற்றாலத்து பெரிய அருவில குளிச்சாச்சு. ஐந்தருவில ஆடியாச்சு. நம்ம குளத்துல நீச்சல் அடிச்சாச்சு. ஆனால் எங்க பம்பு செட்டு தண்ணில தலையைக் கொடுக்கிற சுகம் வேற எதுலயும் வர்ல அத்தே. நீங்களும் ஒரு தடவ இதுல குளிச்சுப் பார்த்தா தெரியும்."

"எல்லா வயலுலயும் குளத்துத் தண்ணி பாயுது. அதனால பம்ப் செட்டுக்கு வேலயில்ல. ஒங்க கிணத்துல அதுவும் குளத்தடிக் கிணத்துல இப்டி பம்ப்செட்ட போட்டு தண்ணிய கொட்ட வச்சால் பார்க்கவங்க என்ன நெனப்பாங்க.."

"அது அவங்க கண்ணோட கோளாறு."

"ஓங்க அண்ணாச்சி திருமலை பார்த்தாமுன்னால்.

"எங்கண்ணாச்சி கோபம் வச்சிருக்கிற மனசுல குணத்தையும் வச்சிருக்கவன். அவன்தான் அப்பாவுக்குத் தெரியாம பம்ப் செட் சாவியைக் கொடுத்தான்."

"ஒன்பாடு லக்கிதான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/77&oldid=1243507" இலிருந்து மீள்விக்கப்பட்டது