பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

131

வேண்டுமென்றெல்லாம் காட்டி ஏற்பாடு செய்து விடலாம்” என்றான் பூமி.

சித்ராவும் தேவகியும் அதற்கு இணங்கினர்.

மறுநாள் மாலை ஐந்து மணிக்கே அந்தப் பெண்ணுடன் சித்ராவும் தேவகியும் மெஸ்ஸுக்கு வந்து விட்டார்கள். அவளுக்கு எல்லா ஏற்பாடுகளையும் விவரித்தபின், பூமி, சித்ரா, தேவகி ஆகிய மூவரும் அவளோடு கூடவே பூங்கா வுக்குச் சென்றனர்.

பூமி ஏற்கெனவே சொல்லி ஏற்பாடு செய்திருந்தபடி பரமசிவமும் வேறுசில நண்பர்களும் பார்க்கில் பல இடங்களில் தனித்தனியே பரவலாகக் காத்திருந்தனர். புதரடர்ந்து மறைவாயிருந்த ஒரு பகுதியில் அந்தப் பெண் காமாட்சி அதுதான் அவள் பெயர். ரெளடி மாணவன் குமரகுருவை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள்.

ஆறேமுக்கால் மணிக்குச் சரியாக ஒளிமங்கி இருள்கவியும் நேரத்துக்கு குமரகுரு அங்கே வந்தான். பூமியும் மற்றவர்களும் உஷாரானார்கள். ஏற்பாட்டின்படி அவன் சிறிதுநேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்த பின் திடீரென்று அவர்கள் திடும் பிரவேசமாக அங்கே எதிர்ப்பட்டு அவனை மடக்க வேண்டும். அவனும் அவளும் பேசத் தொடங்கியதும் அவர்கள் மறைந்து நின்றபடி கவனித்தனர்.


21

சமூகத்தில் அந்தஸ்தினால் எவ்வளவு உயரத்திலுள்ள எந்த வசதி படைத்த அயோக்கியன் தவறு செய்தாலும் அதைத் தட்டிக்கேட்க முடியுமானால் தண்டிக்கிற உரிமை அதன் அடி மட்டத்திலுள்ள வசதியேயற்ற ஒவ்வொரு யோக்கியனுக்கும் வேண்டும்.