இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ராணிமைந்தன் படப்பிடிப்பு குழுவினரோடு சாவி அவர்கள் ஒரே குடும்பமாகப் பழகியதை என்னால் மறக்கவே முடியாது. அன்பே வா' படத்துக்கு சாவி அவர்கள் விமரிசனம் எழுதியபோது படத்தின் நீளம் அதிகம் என்பதை 'மயிலுக்குத் தோகை நீளமாக இருக்கலாம். குரங்கின் வால்தான் நீளமாயிருக்கக் கூடாது. நீளம்தான் மயிலுக்கு அழகு என்று படத்தை மயிலுக்கு ஒப்பிட்டு அவர் மிக நளினமாக எழுதியிருந்ததை நான் பெரிதும் ரசித்து 201