பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

ஒருவழிப் பாதை


உண்மையில், இது ஆழ்மனத்தில் உள்ள சுய வெறுப்பின் சாமர்த்தியமான வெளிப்பாடு. சுய குறைகளைக் கண்டு, தன்னை வெறுக்கவிடாமல் ஒருவரது அடிமனம் அந்த குறைகளை கொண்ட இன்னொருவரை வெறுக்கிறது. 'ஈத்' தடுக்கிறது. 'ஈகோ' அவற்றை சாமர்த்தியங்களாகக் கூட நினைக்க வைக்கிறது. இதே குறைகள் இன்னொரு மனிதனிடம் பிரதிபலிக்கும்போது, ஒருவன், அவனை ஜென்மப்பகைவனாய் கருதுகிறான். வெறுப்பத மூலம் இவன், தன் ஜென்மத்தில் உள்ள குறைகளை மறைமுகமாக வெறுக்கிறான். இதனால் தான் சான்றோர்கள் தன்னை உணரச் சொன்னார்கள். திருமூலர், 'மரத்தை மறைத்தது மாமத யானை' என்றதுக்கும், சாக்ரடீஸ் 'உன்னையே நீ அறிவாய்' என்று சொன்னதுக்கும், பைபிளில் 'உன்னைப்போல் மற்றவனை நேசி' என்று சொன்னதுக்கும் இதுதான் காரணம். பிறரை வெறுக்கும் ஒருவன் தன்னே தானே சோதித்துக் கொள்ள வேண்டும்."

படித்ததை நிறுத்தி விட்டு, திடுக்கிட்டவன்போல், புத்தகத்திற்கு வெளியே விழித்துப் பார்த்த சாம்பசிவத்தின் உடல், ஒருமுறை குலுங்கியது. மானேஜர் சதாசிவத்தை தன்னை கண்ணாடியில் பார்ப்பதுபோல் பார்த்தான்.

அண்ணா - பொங்கல் மலர், 1982