பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வெள்ளித் திரையும், வீதித் திரையும்



அக்னிநாத் திடுக்கிடவில்லையானாலும், அவனோடு வந்த அமாவாசைத் தொலைக்காட்சிக்காரன் திடுக்கிட்டான். அப்புறம் வருந்தினான்... பிறகு உறுதி பூண்டான். எஸ்.டி.டியில பேசி செய்தி சொல்லாதது தப்புதான். தாளிக்கப் போறாங்கதான்... ஆனாலும் அக்னிநாத்தோட திருமண ஏற்பாடுகளையே ஒரு அரைமணி நேர புரோகிராமா ஆக்கிக்காட்டி அந்தப் பெளர்ணமி தொலைக்காட்சிப் பயல தேய்பிறை ஆக்கணும். சாதிக்கலவரத்த படம்பிடிக்க வந்தது நல்லதாப் போயிற்று...

அக்னிநாத், தாய்மாமா வீட்டிற்குள் பரிசக்காரனாய் நுழைவதால், வலது காலை தூக்கி படிதாண்டினான். இயக்குநர் பிரமிப்பும், உள்ளுர் பிரமுகர்களும் இரண்டு கால்களையும் தூக்கிப் போட்டு உள்ளே போனார்கள். அவரைக்கொடியும், பாகற்காய் கொடியும் பந்தலிட்ட முற்றத்தில் ஏற்பாடாய்ப் போடப்பட்ட நாற்காலிகளில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். தயாராய் வைக்கப்பட்ட மோர் டம்ளர்களை தூக்கிக் கொண்டு சிறுவர் சிறுமியர் ஓடிவந்தனர். அக்னிநாத்தை பார்த்ததும் ஒரு சிறுமி 'ஹாய் அக்னி' என்று ஒரு குதி குதித்தாள். அவன் வாயில் மோர் டம்ளரை பொருத்தினாள். ஆங்கிலப் பள்ளியில் படிப்பவள். இப்போதோ நாளைக்கோ என்று இருப்பவள்.

அக்னிநாத், மீண்டும் இயக்குநர் பிரமிப்பைப் பொருள்பட பார்த்தான். மோவாயை நிமிட்டி காட்டினான். உடனே, அவன் இரண்டு பார்சல்களை, அவனது தாய்மாமாவிடம் நீட்டினான். அவன் நீட்ட நீட்ட அக்னிநாத் பின்னணிக் குரல் கொடுத்தான்.

'இந்தப் பெரிய பார்சலுல முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கின பரிசப் புடவை இருக்குது... சின்ன பார்சலுல பத்து லட்சத்துக்குரிய நகைகள் இருக்குது... எடுத்திட்டுப் போய் எல்லாத்தையும் போட்டுக்கிட்டு கயல்விழிய சீக்கிரமா வரச்சொல்லுங்க அத்தே... எனக்கு மாநாட்டுக்கு நேரமாகுது. அப்புறம் அடுத்த மாதம் இந்தப் பக்கம் படப்பிடிப்புக்கு வாரேன். அப்போ கல்யாணத்த வச்சுக்கலாம்.'

அந்தப் பார்சல்களை கைமடிப்பில் சுமந்தபடி உள்ளறைக்குள் அத்தைக்காரி போய்விட்டாள். ஊர்ப் பிரமுகர்களின் கேள்விகளைக்