பக்கம்:சிட்டுக் குருவி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூனை பூனைதான்

பாட்டி வீட்டில் ஒருபூனை
பலநா ளாக வசித்ததுவே.
ஊட்டும் பாலும் பழத்தையுமே,

உண்டு நன்கு கொழுத்ததுவே.




ஒருநாள, அறையில் கண்ணாடி
ஒன்று இருக்கக் கண்டதுவே
விரைவாய அருகில சென்றதுவே
விரைத்து அதனில் பார்த்ததுவே.

கறுத்த நீளக் கோடுகளும்,
கனத்த உடலும் கண்டதுமே,
'சிறுத்தை நான்தான். எவருக்கும்
சிறிதும் அஞ்சிட மாட்டேனே.”

24