இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இருக்கும் இடத்தைத் தேடியே,
இஷ்டத் தோடு வருகிறாய்.
நறுக்கு நறுக்கு என்றுநீ
நன்கு கடித்து விடுகிறாய்.
படுக்கும் மெத்தை, குரிச்சிகள்,
பாய்கள், பெஞ்சு யாவிலும்,
இடுக்கில் இருந்து கொண்டுநீ
என்னைக் கடித்து விடுகிறாய்?
இலையைப் போல இருந்தநீ
இட்லி போலப் பருக்கிறாய்.
கொலைதான் செய்யப் போகிறேன்,
கொடிய மூட்டைப் பூச்சியே!
41