பக்கம்:சிட்டுக் குருவி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூட்டைப் பூச்சியே!



படுத்து உறங்கும் போதிலே,
பயமில் லாமல் என்னையே,
கடித்து எழுப்பும் மூட்டையே,
காலம் கிட்டி விட்டதோ?


இரத்தம் உடலில் ஊறவே,
ஏது ஏதோ மருந்துகள்
சிரத்தை யோடு தின்பதும்,
தினமும் உன்னை வளர்க்கவோ?

இரவில் விழிக்கச் செய்கிறாய்.
இரத்தம் எல்லாம் குடிக்கிறாய்.
பரவும் உன்றன் வம்சமே,
படுத்தும் பாடு கொஞ்சமோ?


40