பக்கம்:சிட்டுக் குருவி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகம் சு ற் றிய த வளை!

சிறிய கிணறு ஒன்றிலே,

ஜீவித் திருந்த தவளையும்,

பெரிய உலகைக் காணவே

பெரிதும் ஆசை கொண்டதே.


எண்ணம் போல உலகையே,

எளிதில் காண வேண்டியே,

தண்ணீர் இறைக்கும் வாளியில்

தாவி ஒருநாள் வந்ததே.


வெளியே வாளி வந்ததும்,

விரைந்து தரையில் தாவியே,

வழியின் நெடுகச் சென்றதே.

வயலும், வரப்பும் கண்டதே.

வழியில் உள்ள குளத்திலே,

வாத்து ஒன்று நின்றதே.

எளிதில் வாத்து தவளையை

எட்டி, ஐயோ, பிடித்ததே.

47