இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உலகம் சு ற் றிய த வளை!
சிறிய கிணறு ஒன்றிலே,
- ஜீவித் திருந்த தவளையும்,
பெரிய உலகைக் காணவே
- பெரிதும் ஆசை கொண்டதே.
எண்ணம் போல உலகையே,
- எளிதில் காண வேண்டியே,
தண்ணீர் இறைக்கும் வாளியில்
- தாவி ஒருநாள் வந்ததே.
வெளியே வாளி வந்ததும்,
- விரைந்து தரையில் தாவியே,
வழியின் நெடுகச் சென்றதே.
- வயலும், வரப்பும் கண்டதே.
வழியில் உள்ள குளத்திலே,
- வாத்து ஒன்று நின்றதே.
எளிதில் வாத்து தவளையை
- எட்டி, ஐயோ, பிடித்ததே.
47