பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்


பிறந்தோம்: அவர் ஆங்கிலேய ஆட்சியை ஆயுத பலத்தால் தாக்கிய சிப்பாய்க் கலகம், சிறுவர்களுக்கான சிறு கதையாகப் பேசப்பட்ட காலத்திலே பிறந்தவர். 1862-ல், சிப்பாய்க் கலகம் அடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பிறகு அவர் பிறந்தார். புயல் அடித்து ஓய்ந்தது, ஆனால் சாய்ந்துபோன மரங்களிலே சில, பாதையிலே கிடந்தன! அப்படிப்பட்ட சமயத்திலே பிறந்தவர், சிங்காரவேலர். இறுதிவரையில் அவரைப் பொறுத்தவரையிலே 1857 தான், ஏகாதிபத்யம், முதலாளித்வம், வர்ணாஸ்ரமம், மேளடீகம், இவைகளைத் தாக்கும் பேச்சுத்தான் அவருக்கு, மேடையிலே மட்டுமல்ல, வீட்டில்! பேச்சியிலேமட்டுமல்ல, பார்வையிலே அப்படித்தான்.

மிதவாத மணிகள் மயிலையில் பல ! தேசியக் கனவான்களும் உண்டு. சீமான்கள் உண்டு! சிங்காரவேலர், வழுக்கியிருந்தால், இதிலே எதில் வேண்டுமானாலும் தங்கிவிட்டிருக்கலாம். சட்டம் படித்தார், வக்கில் ஆனார். ஆனால் எதற்கு? அன்னிய ஆட்சிக்காரன் சட்டம் தொகுப்பது, அதை நாம் படித்து வாதாடுவது, என்பது அடிமைத்தனத்தின் சின்னம், என்று கூறி, அந்த வக்கீல் அங்கியை நெருப்பிட்டுக் கொழுத்தினார், கோர்ட்டை ஏற மறுத்து, மக்கள் மன்றத்திலே, வழக்கை எடுத்துரைத்தார் திறமையுடன். அவருக்கு ஜெர்மன், பிரஞ்சு, ரஷ்ய பொழிகளும் தெரியும்.

இந்தியாவிலேயே விஞ்ஞான அறிவுக்கலை சம்பந்தமாகவும், பொதுவுடைமை சம்பந்தமாகவும் அதிகம்