பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்


ரிகைகள் இருக்கின்றன. அவற்றிலெல்லாம் இலட்சிய வாதிகள் பேனாப் பிடித்துக்கொண்டு இருக்கின்றனராம்!

அவர் வீரர், தீரர், என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். கிளர்ச்சிகள் அவருக்கு நிலாச் சோறு. சிறைவாசம் அவருக்குச் சகஜம். அவர் எதிர்ப்புக்கோ, எகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கோ அஞ்சினவருமல்ல. கும்பலோடு சேர்ந்து சிறைகூண்டு போனவருமல்ல. தேசியத்தின் பேரால் முதல் முதல் கைது செய்யப்பட்ட பெருமை லோக மான்ய திலகருக்கு என்பார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் திலகரைத் தீண்டுவதற்கு முன்பே, தோழர் மா. சிங்காரவேலுவைத் தாக்கிவிட்டது. தேசிய ஆரவாரத்தினால் இந்த உண்மை மறைந்துபட்டது. கான்பூரில் பொது உடைமைக்காரர்கள் என்ற குற்றத்துக்காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்யம், தோழர் சிங்காரவேலுவையும், மௌலான அசரத் மோகானியையுந்தான் முதன் முதல் கைது செய்தது.

"தொழிலாளர்கள்" என்று ஒரு பிரிவினர் உள்ளனர் என்ற உண்மையையே, நாடு அறியும் படி முதலில் எடுத்துக் கூறிய பெருமையும் சிங்காரவேலு உடையதாகும். இங்கிலாந்திலே தொழிலாளர் கிளர்ச்சி ஆரம்பமானபோதே, இங்கு இவர், அத்தகைய கிளர்ச்சியைத் துவக்கினார்.

கூனன்போல் காணப்பட்ட இந்தியாவின் நிலையைக் கண்ட சிங்காரவேலு, முதுகெலும்பு வளைந்தால்