பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

13


கூனி நடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடித்து, நாட்டுக்கு முதுகெலும்பு தொழிலாளரே என்பதை அறிந்து, அந்தத் தொழிலாளரின் விழிப்புக்காக வேலை செய்யத் தொடங்கினார். தொழிலாளர்கள், மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும், மௌடீகத்தாலும் அடக்கப்பட்டு வரும் கொடுமையைக் கண்டு கொதித்தார்.

அவருடைய அபார திறமை" தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தின் போது நன்கு விளங்கிற்று. அது சமயம் அவர் பத்து ஆண்டு தண்டனை தரப்பட்டார்.

ரயில்வே வேலை நிறுத்தம் நான்கு நாட்கள் வெற்றிகரமாக நடந்ததைக் கண்டு, ரயில்வே தலைமை அதிகாரி, ரயில்வே தொழிலாளர்களுடன் சமாதானத்திற்கு வருவதைத் தடுத்தவர்களும், தானும் தனது சகாக்களும் கடும் தண்டனை பெற்றதி லிருந்து தப்பி அப்பீல் மூலம் முயன்ற காலத்தில், அதற்கு எதிராக இருந்தவர்களும். பெசண்டு அம்மையாரும் அவர் தம் சிஷ்ய கோடிகளும் என்பதைத் தோழர் சிங்காரவேலர் நன்கு உணர்ந்தார்.ரயில்வே வேலை நிறுத்தத்தின், இக்காட்டுப் "பத்திரிகை ஜாதி' செய்த பொய்ப் பிரச்சாரம் அன்றைய ஒரு லட்சம் தொழிலாளர் வாயில் மண் போட்டது என்பதற்கும். பின் தலையை எடுக்க வேண்டிய கோடானு தொழிலாளரின் கண் விழிப்புக்குத் தடைக் கல்லாக இருந்த என்பதையும் கண்ட பின்பே, அவர் மனமாறுதல் அடைந்தார். தொழிலாளர் சமூகம் உண்-