பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்


மையாக நியாயம் பெறவேண்டுமானால், முதலானிகளான வெள்ளே முதலாளி, கருப்பு முதலாளி ஆகிய இவர்களின் பிடியினின்று விடுதலையாகு முன், முதலாளிகட்கும், தொழிலாளிகட்கும் உண் மையில் துரோகிகளாக உள்ள போலித் தொழிலாளர் தலைவர்களும் அவர்கள் பத்திரிகைகளும் தொலையவேண்டுமென்று எண்ணினார். அவர் தொழிலாளர் இயக்கத்திலிருந்து சுயமரியாதை இயக்கத்திற்கு வந்ததற்குக் காரணம் இதுவே யாகும்.

தோழர் சிங்காரவேலர் சிறந்த ஒத்துழை யாதார்.நல்ல வரும்படி வந்த காலத்திலும், காந்தியத்தில் நம்பிக்கை கொண்டு தனது வக்கீல்களில் சிங்காரவேவர் முதன்மையானவர். காங்கரசின் பேரால் வக்கில் வேலையை விட்டு,பின்பு, மீண்டும் கோர்ட்டுக்குப் போன வக்கீல்களில் சிங்காரலேயர் சேர்த்தவரல்ல. சிறந்த ஒந்துழையாதாராகவே இருந்தார். சென்னையில் பொதுமக்களின் பேரால் நடந்த பெரிய "கிளர்ச்சிகள்'" நான்கு என்ற சொல்லலாம். குளைமில் வேலை நிறுத்தம், பிரின்ஸ்-சப்-வேல்ஸ் பகிஷ்காரம், சைமன் பகிஷ்காரம், கானாட்டுக் கோமகன் பகிஷ்காரம் என்பவைகளில் தோழர் ரசிங்காரவேலர் முதல் முன்றிலும் பூரண பங்கெடுத் துக்கொண்டார். இதே காலத்தில் அமெரிக்காவில், சாக்கோ, வான்சிட்டி என்ற இரண்டுச் பொது உடைமைத் தோழர்கள், பொது உடைமை வழக்கில் சம்பந்தப்பட்டு எலக்ட்ரிக் மூலம் கொல்லப்பட்டார்கள். இச்செயலைக் கண்டிக்கச், சென்னை