பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

15


பீப்பில்ஸ் பார்க்கில் தோழர் சிங்காரவேலர் ஓர் பிரம்மாண்டமான கூட்டத்தைக் கூட்டினர். மாகாண சர்க்கார் பயந்து தனது போலீஸ் படை முழுவதையும் அனுப்பி அக்கூட்டத்தை பயமுறுத்தியது. அன்றைய கூட்டத்திற்குத் தலைமை வகிக்க ஒத்துக்கொண்டவரும், பிரசங்கம் செய்யச் சம்மதித்தவர்களும் போலீஸ் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அஞ்சி அந்தப் பக்கமே வரவில்லை.

மனம் அலுத்த சிங்காரவேலர் தனியாகப் பீப்பில்ஸ் பார்க் பக்கம் வந்தார். தன் நண்பர்கள் யாரும் வரவில்லையே என்பதற்காகப் பயந்துவிடவில்லை. கூட்டமோ இவ்வளவு தடபுடலாகக் கூடாது என்று எண்ணி வந்த சிங்காரவேல் அங்கு கண்டதென்ன? பிரம்மாண்டமான கூட்டத்தையும், அதன் மத்தியில் ஒருவர் சமதர்மப் பாடல் பாடுவதையும், இரண்டு மூன்று இளைஞர்கள் மேடை மீது இருப்பதையும் கண்டார். தான் எதிர்பாராத சம்பவம் நடப்பதைக் கண்டு ஓர் சிறிய புன்னகையுடன் மேடையருகில் வந்து பார்ந்தார். மேடை மீது இருந்தவர்கள் தனக்குப் புதிதாய் இருந்தாலும், அன்று தான் எடுத்துக் கொண்ட வேலைக்கு தனக்கு உதவியாக இருப்பதைக் கண்டு, ஆச்சரியப்பட்டார். கூட்டமே நடக்காது என்று எண்ணியவர் சென்னைப் பொது மக்கள் இவ்வளவு போலீஸ் மீரட்டலையும் அலட்சியப்படுத்திக் கொடுமையாகக் கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்கத் தொழிலாளர்களிடம் அனு-