பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்


தாபம் காட்டி அவர்கள் கொள்கையை ஆதரிப்பதற்கு அறிகுறியாக இக்கூட்டம் கூடும்படி செய்த சென்னைப் பொதுமக்களைப் பாராட்டினார், இக்கூட்டத்தில் தான், காலஞ் சென்ற சிங்காரவேலரின் கவனம் சுயமரியாதை இயக்கத்தின் பக்கம் திருப்பப்பட்டது. பட்டுக்கோட்டைத் தோழர் அழகர் சாமி சொன்னார். 'செருப்புத் தைக்கும் சமூகத்திலும் மீன் பிடிக்கும் சமூகத்திலும் பிறந்த இரண்டு தொழிலாளர்கள் அமெரிக்க சர்க்காரால் தண்டிக்கப்பட்டார்கள். தொழிலாளர் சமூகம் விழிக்குமுன்பு, இத்தயை சம்பவங்கள் பல நிகழவேண்டும். நமது நாட்டுத் தொழிலாளர் உலகம் கண்விழித்து இத்தாலிய மீன்பிடிக்கும், தொழிலாளியான வான்சிட்டி இறந்ததைப்போல், நமது உண்மைத் தொழிலாளர் தலைவரான சிங்காரவேலர் இந்நாட்டு வான்சிட்டியாக சர்க்காரால் தண்டிக்கப்பட்டு, அக்கூட்டத்தைக் காண அசைப்படுகிறேன் என்று. இச்சொல் ஒன்றே சிங்காரவேலரைச் சுயமரியாதைக்காரனாக்கியது.

சுயமரியாதை இயக்கம் சமதர்மம், இந்நாட்டு மக்களுக்குத் தக்கபடி எடுத்துச் சொல்லி, 'மார்க்கீசம்' என்பதன் பொருளாதார தத்துவத்தைச் சாதாரணமானவரும் உணரும்படி செய்த பெருமை நாட்டில் இருவரையே சாரும். மற்ற மற்ற மாகாண மக்கள் பொது உடைமைத் தத்துவத்தை உணர்த்திருப்பதற்கும். இம்மாகாண மக்கள் அதிலும் தொழிலாளர் இயக்கம் பொது உடைமையை உணர்ந்திருப்பதற்கும் இன்னும் ஏராளமான வித்தியாசம்