பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 73 தான் முன்னுக்கு வந்திட தடைகளை தவிர்த்துவிட்டு மேலேறி வெற்றி கண்டவர்கள் அவர்கள். இல்லையே என்று குறைபட்டுக் கொண்டவர் களும், இவையெல்லாம் இருந்தால் நான் சாதாரணமாக செய்து முடித்து விடுவேன் என்று பட்டியல் போட்டுப் பேசிக் காலத்தை கழிப்பவர்களும் வாழ்வார்களே தவிர, முன்னேற முடியாது. முடியவே முடியாது. பேசும் பிரச்சினைக்குப் பதில் சொல்லாமலே செயலால் செய்து காரியம் சாதிப்பவர்களே வெற்றி பெற முடியும். இருக்கும் செளகரியக் குறைகளை ஒதுக்கிவிட்டு உறங்கி மகிழும் குமரனைப் போல, இருக்கும் வசதியை வைத்துக் கொண்டு சரியாகச் செய்து ஆற்றலைக் காட்டுகின்றவர்களே பேரும் புகழும் பெறுவார்கள். எத்தனையோ வடிவேலனும் குமரனும் நம்மிடையே உலவத்தான் உலவுகின்றார்கள். யாரைப் பின்பற்றுவது என்பதில் தான் நமது உயர்வும் தாழ்வும் உள்ளது. அது அவரவர் மனப்பண்பையும் தெம்பையும் பொறுத்தே அமைகிறது என்பதே உண்மை நிலைமையாகும்.