பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

199



1119. “பகைமை பாராட்டாமல் வாழ்தல் ஒரு சிறந்த பண்பு.”

1120. “தலைமைக்கு ஆசைப்படாது மற்றவர்க்குத் தலைமையை விட்டுத்தரும் தைரியசாலிகள் ஆயிரம் ஆண்டுக்கு ஒரு தடவைதான் பிறக்கின்றனர்.”

1121. “அன்றாடம் கணக்குப் பார்க்காதவன் ஆக்கம் பெற இயலாது.”

1122. “காலம் என்ற களத்தின் அருமையை இன்னமும் பலர் அறியாதது, இந்திய சமூக வாழ்க்கையின் தீமைகளுள் ஒன்று.”

1123. “அடையவேண்டும் என்ற முனைப்புடன் கூடியதே முயற்சி.”

1124. “காரியத் தேவைகள், மனிதனை நிர்வான நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.”

1125. “மமதையின் முன்னால் சிறு தவறுகளும் பெரியனவாகத் தோன்றும்.”

1126. “நாம் ஆக்கி வைத்தால் போதாது. ஊட்டி விடவேண்டும் என்றும் சிலர் எதிர்பார்க்கிறார்கள்.”

1127. “சிந்தையில் அகந்தை உடையவர்கள் எளிதில் அணுகமாட்டார்கள்.”

1128. “முந்திரிப் பழத்தில் கொட்டை வெளியே துருத்திக் கொண்டிருப்பதால் பழத்திற்குச் சுவை குறைவு.”

1129. “மரியாதை’ என்ற பெயரால் விளையும் மனச்சங்கடங்களே மிகுதி.”

1130. “மன எழுச்சியுடன் பேசுபவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள்.”