பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

161



1583. “மிரட்டுபவர்களுக்குப் பணிவது சாவதற்குச் சமம்.”

1584. “மனிதகுலம் வாழத் தெரிந்து கொண்டால் பருவ காலமும் ஏவல் செய்யும்.”

1585. “எண்ணி திட்டமிட்டு காரியங்கள் செய்யாது போனால் காரியக் கேடுகள் நிகழ்வதைத் தவிர்க்க இயலாது.”

1586. “குறைகள் ஏராளம் மாற்றும் முயற்சியைத் தான், காணோம்.”

1587. “இந்திய நிர்வாக அமைப்பு, வழக்கமாகச் செல்வது. அதற்குமேல் உயிர்ப்பு இல்லை.”

1588. “மனிதன்-வாழ்க்கையின் குறிக்கோளை அறிந்து வாழத் தொடங்கும் நாளே அவன் உண்மையில் பிறந்த நாள்.”

1589. “ஆன்மீகம் என்பது ஆன்மாவின்-உயிரின் முதிர்ச்சிக்குரிய முயற்சிகளை மேற்கொள்ளும் வாழ்க்கையைக் குறிக்கும்.”

1590. “பழுத்தபழம் எல்லார்க்கும் சுவையாக இருப்பதுபோல ஆன்மீகத்தில் முதிர்ச்சி அடைந்தவர்கள் யார் மாட்டும் அன்பு செய்வர்.”

1591. “மதம் கடவுளுக்காக ஏற்பட்டதல்ல-மனிதனுக்காகவே.”

1592. “தீயவர்களின் கருவியாக மதம் பயன்படுத்தப் பெறும்பொழுது - மதம் பழிப்புக்கு ஆளாகிறது.”

1593. “சாதாரண மக்களுக்குத் தொண்டு செய்வது ஒர் ஆன்ம திருப்தியே-ஆனால் வளர்ச்சியும் சிறப்பும் கிடைக்காது.”

த-11