பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு அடிகளார்



1689. “ஓராண்டு கடந்துவிட்டது, என்று ஊதிய உயர்வு எதிர்பார்ப்பவர்கள், ஒராண்டில் நடந்தது என்ன என்று கணக்குப் போட்டுப் பார்க்க மறுக்கிறார்கள்.”

1690. “எல்லோருமே வெற்றி கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அப்படியானால் தோற்பது யார்?”

1691. “வெற்றி, தோல்வி மனிதர்களின் தரத்தை நிர்ணயிப்பது அல்ல. வெற்றி, தோல்வி அவர்களை எப்படி ஆக்குகிறது என்பதை பொறுத்துத்தான்!”

1692. “பல நாள்கள் சிந்தித்துத் தொகுத்த ஆதாரங்கள் அடிப்படையில்தான் ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்த இயலும்.”

1693. “தெளிவான விபரங்கள், திட்டங்கள் இல்லாத செயற்பாடு அரங்கின்றி ஆடுவதை ஒக்கும்.”

1694. “தன்னுடைய வசதிகளுக்கு ஏற்ப, காலத்தைப் பயன்படுத்துபவர்கள், கடமைகளைச் செய்பவர்கள் ஒருபொழுதும் மற்றவர்களுக்குப் பயன்பட மாட்டார்கள்.”

1695. “ஒருங்கிணைப்பு மிக்க உணர்வு இல்லாத நிறுவனம் செயற்பாட்டில் பயன் கிடைக்காது. இழப்பும் ஏற்படும்.”

1696. “எதையும் காலக் கெடுவுடன் செய்து பழகாதார் நாட்களை இழந்துவிடுவர்.”

1697. “செயல் மாட்டாதாரிடம் கோடி கொடுத் தென்ன? யாதொரு பயனும் இரா!”

1698. “நோக்கத்தில் ஒன்றாதாரைப் பணியில் உடனுழைப்பாளர்களாக ஏற்பது கடினம்.”